Saturday, November 24, 2012

thumbnail

எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்

இந்திய மருத்துவ கவுன்சில் முடிவுபடி மருத்துவ கல்லூரி தேர்வு முடிவுகளை திருத்தி வெளியிட வேண்டும். முதலாம் ஆண்டு 'பிரேக் சிஸ்டம்' முறையை நீக்க வேண்டும். 90 சதவீதமாக உள்ள வருகை பதிவேட்டை 75 சதவீதமாக மாற்ற வேண்டும். தேர்வு மதிப்பெண்கள் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு முறையை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவ மாணவர் கூட்டமைப்பு சார்பில், நேற்று கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ கல்லூரி மாணவர்கள் கூறியதாவது:-
 
தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் பயிலும் முதலாமாண்டு மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால் 2-ம் ஆண்டு செல்ல முடியாது. அவர்கள் 6 மாதங்கள் கழித்து மீண்டும் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றால்தான் 2-ம் ஆண்டு செல்ல வேண்டும். இதனால் கால விரயம் ஏற்படும் என்பதால் எங்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். எனவே எம்.சி.ஐ. விதிமுறைகளுக்கு முரணாக உள்ள இந்த புதிய விதிமுறைகளை மாற்ற வேண்டும்.
 
கேரளா, குஜராத், ஆந்திரா போன்ற மாநிலங்களில் 'பிரேக் சிஸ்டம்' முறையை நீக்கியதை தமிழக அரசும் எம்.சி.ஐ.யிடம் 'பிரேக் சிஸ்டம்' முறையை நீக்க பரிந்துரை செய்ய வேண்டும். வருகைப்பதிவை பழைய முறைப்படி 75 சதவீதமாக மாற்ற வேண்டும். புதிய விதிமுறைகளால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த முறையை மாற்றி பழைய முறைகளை நடைமுறைப்படுத்த தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
 
இந்தநிலையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜய், நேரில் சென்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவாதத்தை நடத்தினார். அப்போது அவர், உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ கல்லூரி தேர்வு முடிவுகள் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என உறுதி அளித்தார்.
 
அமைச்சரின் இந்த உறுதி மொழியை ஏற்றுக்கொண்ட மருத்துவ கல்லூரி மாணவர்கள் தங்களின் உள்ளிருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றனர். பின்னர் அமைதியாக அனைவரும் கலைந்து சென்றனர்.

Friday, November 09, 2012

thumbnail

இந்த தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட....

பண்டிகைகள்
பண்டிகைகள் ஒவ்வொரு நாட்டுக்கும் அடையாளமாக மிளிர்பவை. நாட்டின் கலாசாரம், மதம், நாகரிகத்தின் சின்னமாகக் கருதப்படும் பண்டிகைகள், நாட்டை  ஒருங்கிணைக்கும் ஆற்றலும், மக்களுக்கு புத்துணர்வளிக்கும் திறனும் கொண்டவையாக விளங்குகின்றன.
பாரத நாட்டில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பகுதியில் ஏதாவது ஒரு அடிப்படைக் காரணத்துக்காக திருவிழாக்கள் கொண்டாடப்படுவது வழக்கமாகவே உள்ளது. எனினும் நாடு நெடுகிலும் பரவலாகவும், ஒத்த சிந்தனையுடனும் கொண்டாடப்படும் விழாக்கள் சில மட்டுமே. அவற்றுள் தலையாயது தீபாவளி.
 தீபாவளி 
நரகாசூரன் பூமித்தாயின் மைந்தன் என்பதும், அவனது அக்கிரமங்கள் தறிகெட்டபோது, இறைவனின் சாரதியாக பூமாதேவியே தேரைச் செலுத்தி, தனது மகன் என்றும் பாராமல் அவனது அழிவுக்கு வித்திட்டாள் என்பதும் தான்.
எனினும், அந்த அன்னையின் மனம் மகிழவும், சாகும் முன் திருந்திய அரக்கனின் மனம் குளிரவும், அவன் கேட்ட வரத்தின்படி, அதிகாலையில் நரகாசூரனை நினைந்து  எண்ணெய்க் குளியல் நடத்தி, இல்லங்களில் தீபங்களை ஏற்றி, புத்தாடை அணிந்து, நன்மை எங்கும் ஓங்க பிரார்த்தனை செய்கின்றோம்.

ஐப்பசி மாத அமாவாசை அன்று தீபாவளி திருநாள்

முன்பதிவு
தீபாவளி கொண்டாட சொந்த ஊர் செல்லுபவர்கள் பஸ் /ரயில் முன்பதிவு செய்து செல்லுவார்கள் .முன்பதிவு செய்யவில்லை என்றால் முதல் நாள் லீவ் எடுத்து கிடைக்கிற வண்டியே மேல் என்று செல்ல வேண்டியது தான்.
புத்தாடை
புத்தாடை வீட்டில்  உள்ள அனைவர்க்கும் வாங்க கடைத்தெரு சென்று அவர்ர வரகளுக்கு  பிடித்த உடை வாங்கி தையல் கடை காரரிடம் சரியாய் தைக்க அளவு கொடுத்து தீபாவளி முன் கொடுக்க சொல்வதும் இல்லையென்றால் இருக்கவே இருக்கு ரெடிமேட் துணி .
பட்டாசு  
அண்மையில் சிவகாசி பட்டாசு ஆலையில் நிகழ்ந்த விபத்து காரணமாக,இந்த  ஆண்டு தீபாவளி பட்டாசு கடைகளுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்க  முடிவு செய்துள்ள  காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை, பிளாட்பார, தெருவோர கடைகளுக்கு தடை  விதித்துள்ளது .
பட்டாசு வகைகள் 
குருவி வெடி, லட்சுமி வெடி, ஜம்போ வெடி, டபுள் சவுண்டு வெடி,சங்குசக்கரம் ,சாட்டை.புஸ்வானம் ,பாம்பு மாத்திரை ,ராக்கெட் ,அணுகுண்டு , சரவெடி , கம்பி மத்தாப்பு,டிவி டவர், ஏரியல் அவுட், மேஜிக் ட்ரீ, கோல்டன் ஸ்பைடர் போன்ற பேன்சி பட்டாசுகளும், ஸ்டார் பயர் எனப்படும் பல வண்ண பட்டாசுகளும்,வாங்கி வைத்திருப்பர் .







 தீபாவளி முதல் நாள் இரவு 
அம்மா & பாட்டி செய்யும் 
தீபாவளி பலகாரங்கள் 

முறுக்கு
லட்டு 
அதிரசம் 
மைசூர் பாகு 
பட்சணங்களை ருசி பார்த்து














நண்பர்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்புவது வாழ்த்து செய்தி அனுப்பியவர்களுக்கு நன்றி கூறுவது என்று அலை பேசி அன்று எல்லாரிடமும் பிசி தான்

தீபாவளி அன்று 
 
விறகு அடுப்பில் தவலையில் கொதித்துக் கொண்டிருக்கும் வெந்நீரில் ஒரு வாளி எடுத்து குளிக்கப் போய், நாலடி பாத்ரூமில் கங்கா ஸ்நானம் செய்து கண்ணில் சீயக்காய்ச் சிவப்புடன் வெளி வந்து, தீபாவளி மருந்து வாங்கி, பாட்டி கையால் புதுத் துணி கையில் வாங்கி காலில் விழுந்து ஆசி வாங்கி உள்ளே ஓடி ...

புத்தாடையுடன் வெளி வந்து, சாமிக்கு, பெரியவங்களுக்கு நமஸ்காரம்  செய்து,  சாஸ்திரத்துக்கு வெடி வெடிக்கத் தொடங்கி
பேசி, சிரித்து, முறைத்து, சண்டையிட்டு, கூடி மகிழ்ந்து
இட்லி
பஜ்ஜி,
சாம்பார்,
சுழியம்  
உளுந்து வடை  
பலகாரங்கள் 

என்று சாப்பிட்டு
மிஞ்சிய வெடிகளை பத்திரப் படுத்தி, வெடிக்காத வெடிகளை மருந்தை வெளியில் எடுத்து பேப்பரில் கொட்டி கொளுத்தி, கைக்காயம் கால்காயம் பட்டு, பெற்றவர்களை டென்ஷன் ஏற்றி ...
இதேல்லாம்  இல்லாமல்
எந்த அசம்பாவிதமும் நடக்காமல் சுற்றம் ,சொந்தங்கள் ,நண்பர்கள் அனைவருடன் மகிழ்ச்சியுடன் வருண பகவான் ஒத்துழைப்புடன் இந்த தீபாவளியை  கொண்டாடுவோம் .
  
தீபாவளி வாழ்த்து















தீப ஒளி நமது அறிவைப் பெருக்கி, அறியாமை இருளகற்றி, வற்றாத இறையருளை இல்லமெங்கும் பாய்ச்சட்டும்!























இந்த தீபத் திருவிழாவை முன்னிட்டு  ஆப்பிள் தனது புதிய ஐபோன் 5ஐ இந்தியாவில் களமிறகியுள்ளது .

About